கோழியை விழுங்கப் பார்த்த மலைப்பாம்பு.. மின்னல் வேகத்தில் மீட்ட வனத்துறை! வைரலாகும் வீடியோ..!

 
1

கோவை தொண்டாமுத்தூர் விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப் பாம்பால் பரபரப்பு நிலவியது.

விழுங்குவதற்கு தயாராக இருந்த அந்த பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மிகவும் சாதுர்யமாகவும், பாதுகாப்பாகவும் அந்த மலைப்பாம்பைப் பிடித்தனர்.​பாம்பின் பிடியில் இருந்து கோழி உயிருடன் மீட்கப்பட்டது, அங்கு இருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது.


பிடிபட்ட மலைப்பாம்பு காயங்கள் ஏதுமின்றி ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், அதனை அருகில் உள்ள பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விடுவிக்க கொண்டு சென்றனர்.