அதிரடியாக ஏற்றம் கண்ட தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.440 உயர்வு..

சென்னையில் ஆபரண தங்கம் விலை தொடர்ந்து 3 வது நாளாக சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. அவ்வப்போது பெயரளவுக்கு ஓரிரு நாட்கள் குறைந்தாலும், கனிசமாக விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் , டிசம்பர் மாதங்களில் ரூ. 39,000 முதல் ரூ. 40,000 வரை விற்பனையான தங்கம் விலை, கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து அண்மையில் ஒரு சவரன் ரூ.46,000 தொட்டது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் சற்று விலை குறைந்து வந்தது. அதன்படி கடந்த 17 அன்று 360 ரூபாயும், நேற்று முன் தினம் 160 ரூபாயும், நேற்று 200 ரூபாயும் குறைந்திருந்தது.
இந்நிலையில் இன்று , சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒருசவரன் ரூ. 45,000க்கும், ஒரு கிராம் ரூ.5,625க்கும் விற்பனையானது. இன்று சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு சவரன் ரூ45,440க்கும், ஒரு கிராம் ரூ.5,680க்கும் விற்பனையாகிறது. இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் ரூ.79க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளிரூ. 79,000க்கு விற்கப்படுகிறது.