3 ஆண்டுகளுக்கு பின் மசோதாவை திருப்பி அனுப்பிய குடியரசு தலைவர்! என்ன மசோதா? முழு விவரம்

 
draupadi murmu draupadi murmu

சென்னை பல்கலைக்கழக வேந்தரை நியமிக்கவும், நீக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவை திருப்பி அனுப்பினார் குடியரசு தலைவர்

சென்னை, பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளித்து சட்ட மசோதா கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது போன்று பல்வேறு சட்ட மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 க்கு மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்து இருந்தார்.  இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இதற்கிடையில் இந்த மசேதாவை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாக்களை கடந்த 2023ம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர். இதில் சென்னை பல்கலைக்கழக சட்ட மசோதாவை 2 ஆண்டுகள் குடியரசு தலைவர் நிலுவையில் வைத்து இருந்தார்.  இந்நிலையில் தற்போது இந்த சட்ட மசோதாவை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பி உள்ளார். , பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த மசோதாவை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பி உள்ள குறிப்பிடத்தக்கது. 

.