மக்களுக்கு அடுத்த ஷாக்..! ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிடும் நிறுவனங்கள்..!
நாடு முழுவதும் 5G சேவையை மிக விரைவாகவும், விரிவாகவும் கொண்டு செல்வதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ளன. இந்த பிரம்மாண்ட முதலீட்டை மீட்டெடுக்கவும், நிறுவனங்களின் நிதி ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் இந்த கட்டண உயர்வு அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள் மற்றும் சந்தைப் போட்டிக்கு மத்தியில், நிறுவனங்களின் நிகர லாபத்தை (Average Revenue Per User - ARPU) உயர்த்துவதே இந்த முடிவின் முக்கிய நோக்கமாகும். ஏற்கனவே அவ்வப்போது சிறிய அளவில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் 15% வரை உயர்வு என்பது மொபைல் பயனர்களின் மாத பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். டேட்டா பயன்பாடு மற்றும் வாய்ஸ் கால்கள் சார்ந்த ரீசார்ஜ் திட்டங்களில் இந்த மாற்றம் பெரிய அளவிலான விலையேற்றத்தைக் கொண்டுவர வாய்ப்புள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் லாபத்தை நோக்கி நகர்வது ஒருபுறம் இருந்தாலும், தரமான சேவையைத் தொடர்ந்து வழங்கவே இந்த விலையேற்றம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தங்களது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 15% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த கட்டண உயர்வால் சாதாரண ரீசார்ஜ் திட்டங்களின் விலை ₹50 வரை உயரக்கூடும்.

