'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவுக்காக மலேசியா அரசாங்கம் போட்டுள்ள நிபந்தனைகள்..!

 
1 1

'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவுக்காக மலேசியா அரசாங்கம் போட்டுள்ள நிபந்தனை தொடர்பாக சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' விஜய்யின் கடைசிப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் வழக்கத்தை விட, அவருடைய இந்த படத்துக்கான ஆடியோ லான்ச்சுக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது. இதனிடையில், மலேசியா அரசாங்கம் 'ஜனநாயகன்' ஆடியோ லான்சுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்வாகவே இந்த பங்ஷன் இருக்க வேண்டுமெனவும், அரசியல் சம்பந்தமான கருத்துக்களை பேசக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆடியோ லான்ச்சில் பங்கேற்கவுள்ள ரசிகர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் போடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி கட்சி கொடி, துண்டு, உடை, பேட்ஜ், டீ ஷர்ட் உள்ளிட்ட அரசியல் கட்சி சம்பந்தமான எந்த பொருட்களுக்கும் அனுமதி இல்லையென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ஆடியோ லான்ச் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவே இருக்க வேண்டும். அரசியல் சார்ந்த விஷயங்கள் இருக்கக்கூடாது என காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், அதனை மீறினால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதனால் 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் ஆடியோ லான்ச் இரண்டு விதமான நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ளது. அதன்படி, முதலில் விஜய்யின் முந்தைய படங்களின் ஹிட் பாடல்களை பாடகர்கள் பாட உள்ளது. இசை கச்சேரி போலவே இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து ஆடியோ லான்ச்சை நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக சர்ப்ரைஸாக அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜனநாயகன்' படத்துடைய மூன்றாவது பாடலை வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.