#BREAKING சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது

 
சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சவுக்கு சங்கர்...

சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டாஸ் சட்டத்தில் அடைக்க காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

tn


சவுக்கு சங்கர் அண்மையில் யூடியூப்பிற்கு அளித்த பேட்டியில் பெண் காவல் துறை அதிகாரிகள் பதவி உயர்விற்காக உயர் அதிகாரிகளிடம் சமரசம் செய்து கொள்வதாக மிகவும் கீழ்த்தரமாக பேசினார். முன்பொரு முறையும் நீதிபதிகளிடம் பணியாற்றும் பெண் உதவியாளர்கள் பற்றியும் மிகவும் இழிவாக பேசியுள்ளார். இவ்வாறு பெண்களின் கௌரவத்தை பங்கப்படுத்தும் நோக்கத்தோடு கீழ்த்தரமாக பொதுவெளியில் பேசிவரும் சவுக்கு சங்கர் மீது கோயம்புத்தூர் காவல்துறை சைபர் குற்றவியல் பிரிவு தமிழ்நாடு பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் தடுப்புச் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழும், இந்திய குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 353, 509, 294/61 ஆகிய பிரிவுகளின் கீழும்  வழக்குகளை பதிவு செய்து கைது செய்துள்ளது.

tn

பெண் காவலர்களை அவதூறாக பேசியது, கஞ்சா பறிமுதல் செய்தது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவரை குண்டாஸ் சட்டத்தில் அடைக்க காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.