வரக் கூடிய தகவல்கள் நம்பிக்கை அளிக்கவில்லை - ஈஷா யோகா மையம்

 
வரக் கூடிய தகவல்கள் நம்பிக்கை அளிக்கவில்லை - ஈஷா யோகா மையம் 

நேபாளம் சென்ற 80 வெளிநாட்டினர் தொடர்பாக வரக் கூடிய தகவல்கள் நம்பிக்கை தருவதாக இல்லை என ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

தங்களது குழுவில் இருந்து 80 வெளிநாட்டினர் நேபாள வெள்ளத்தில் சிக்கிய நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஈஷா யோகா மையம், நேபாளம் சென்ற 80 வெளிநாட்டினர் தொடர்பாக வரக் கூடிய தகவல்கள் நம்பிக்கை தருவதாக இல்லை. காத்மாண்டுவில் இருந்து மீட்பு, நிவாரணக் குழுக்களுடன் தொடர்பு கொண்டு 80 பேரை தேடி வருகிறோம். 80 பேரும் தங்கியிருந்த இடம் 45-50 அடிக்கு சேறும், மண்ணுமாக மூடிக் கிடக்கிறது. தங்கி இருந்தவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என அப்பகுதி பற்றி அறிந்தவர்கள் கூறுகின்றனர். தங்களது குழுவைச் சேர்ந்த 80 வெளிநாட்டினரை மீட்பு, நிவாரணக் குழுக்களுடன் இணைந்து தேடி வருவதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. 80 பேரின் நிலை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளது.