மணமகன் வீட்டாரின் பேராசை! - வரதட்சணை மரண வழக்கில் நீதிபதிகள் வெளியிட்ட பகீர் கருத்து!

 
supreme court

வரதட்சணை மரண வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு, பாட்னா உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு வழங்கிய ஜமீனை ரத்து செய்த நீதிபதிகள், அவர் காவல்துறையினர் முன்னிலையில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டனர்.


வரதட்சணை மரணம் போன்ற மிகத் தீவிரமான குற்ற வழக்குகளில், உயர்நீதிமன்றம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினார். பெரும்பாலும் மணமகன் வீட்டார் பேராசையுடன் வைக்கும் கோரிக்கைகளால், மணப்பெண்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் அல்லது கொலை செய்யப்படுகிறார்கள் என்றும் கூறினார். வரதட்சணை மரணங்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய களங்கம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் வரதட்சணை மரணங்கள் மனித உரிமை மீறலைக் குறிக்கும் மிகப்பெரிய சமூக தீமை என்று வேதனை தெரிவித்தனர்.