மாற்றம் தருகிறோம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிய தவெக அரசு – நயினார் நாகேந்திரன்..!

 
1

 பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொடும் குற்றப் பின்னணி கொண்ட கிரிமினல்களைத் தேடித்தேடித் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிறுத்தி, தற்போது அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக உலா வரச் செய்திருப்பது தமிழகத்தில் பெரும் அச்ச அலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் விருப்பமனு கொடுத்திருந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்துக் காவல்துறையைக் கண்டு ஓடி ஒளிந்த குற்றவாளிகளுக்கு தவெக தலைமை அதிகாரம் வழங்கியதன் பின்னணி பணமா அல்லது பயமா ? இத்தகைய கிரிமினல்களால் எப்படி மக்கள் பணியாற்ற முடியும்.

மாற்றம் தருகிறோம் என்ற பெயரில் ஆட்சியமைத்த ஒரே மாதத்திற்குள்ளேயே மக்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைப் பரிசளித்துள்ள தவெக அரசின் இந்தச் செயலைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.