ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கி இருந்த மழை நீரில் சிக்கிய பேருந்து போராடி மீட்பு

 
ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கி இருந்த மழை நீரில் சிக்கிய பேருந்து போராடி மீட்பு ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கி இருந்த மழை நீரில் சிக்கிய பேருந்து போராடி மீட்பு

கோவை ரத்தினபுரி சங்கனூர் ரயில்வே பாலத்தின் கீழ் மழை நீரில் சிக்கிய அரசு பேருந்தை தீயணைப்பு துறை போராடி பொக்லைன் மூலம் மீட்டனர். 

கோவையில் இரண்டாவது நாளாக பெய்து வரும் கனமழையால்,  ரத்தினபுரி - சங்கனூர் ரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கியது. அப்போது அவ்வழியாக 25 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து பாலத்தின் அடியை மழை நீரில் சிக்கியது. இதையடுத்து உள்ளே இருந்த 25 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் கிரேன் மூலமாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மழை நீரில் சிக்கிய அரசு பேருந்தை வெளியே எடுத்து மீட்டனர். மேலும் ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீர் மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.