வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த காளை! ஜல்லிக்கட்டில் நேர்ந்த சோகம்

 
மாடுபிடி வீரரை சுழற்றி அடித்த காளை…மிரள வைக்கும் வீடியோ!

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை ஒன்று வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தது.

Image

பொங்கல் பண்டிகையையொட்டி  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் இன்று  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  800 காளைகளும், 320 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. சிறப்பாக பங்கேற்ற மாடு பிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் இருசக்கர வாகனம், சைக்கிள், தங்க காசு, வெள்ளி காசு, ப்ரிட்ஜ், குக்கர், டேபிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது 27 மாடு பிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 17 பேர், பார்வையாளர்கள் 10 பேர் என மொத்தன் 54 பேர் காயமடைந்தனர். காயமடைந்ததில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த அருண் பிரதாப் என்பவரது காளை வாடிவாசல் வழியாக வெளியே சென்ற பின்பு போட்டி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் கட்டளை மேட்டு வாய்க்கால் பாலத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது. அதனை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். ஆனால் அந்த காளை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.