தேனிக்கு எடுத்துச் செல்லப்படும் பவதாரிணி உடல்

 
பவதாரிணி

பின்னணிப் பாடகி பவதாரிணி உடல் தேனி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணை புரத்தை சொந்த ஊராக கொண்டு சினிமா துறையில் இசை மற்றும் பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் இளையராஜா இவருக்கு சொந்தமான பண்ணை வீடு கம்பம் அருகே உள்ள லோயர் கேம்ப்பில் அமைந்துள்ளது. அவரது மகள் பாடகி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் மரணம் அடைந்தார். அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவிற்கு சொந்தமான வீட்டில் பவதாரணி உடலை நல்லடக்கம் செய்வதற்காக பந்தல் அமைக்கும் பணி மற்றும் சமுதாய முறைப்படி அவரது உடலை நல்லடக்கம் செய்யும் பணிகளை தொழிலாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள அவரது சொந்த வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரே நல்லடக்கம் செய்து
மணிமண்டபங்களை கட்டி இளையராஜா வழிபட்டு வருகின்றார். தற்பொழுது தனது குடும்பத்தில் மூன்றாவதாக இறந்த தனது மகளின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு இசையமைப்பாளர் இளையராஜா அங்கு முன்னேற்பாட்டு பணிகளை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.