அந்த மனசு தான் சார் கடவுள்..! ஏழைகளுக்காக இலவச மருத்துவமனை கட்டும் பிரபாஸ்!

 
1

ரெபல் ஸ்டார் கிருஷ்ணம்ராஜு போலவே பிரபாஸும் சேவைகளைச் செய்து வருகிறார். இப்போது பெரியப்பாவின் கனவை நிறைவேற்றப் போகிறார். 

பிரபாஸ் நடிகராக வளர்வதற்கு உறுதுணையாக இருந்த கிருஷ்ணம் ராஜுவும் சேவை காரியங்களில் எப்போதும் முன்னணியில் இருப்பார். அவருடைய நடிப்பு வாரிசாக இன்று பான் இந்திய ஸ்டாராக சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறார் பிரபாஸ். ஒரு பக்கம் படங்கள் நடித்துக்கொண்டே ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்து பெரிய மனசுடன் இருக்கிறார். விரைவில் பிரபாஸ் ஆதரவுடன் ரெபல் ஸ்டார் கிருஷ்ணம்ராஜுவின் மனைவி ஷியாமளா தேவி இணைந்து ஒரு மருத்துவமனை கட்டி ஏழைகளுக்கு மருத்துவம் அளிக்க இருக்கிறார்களாம். 

விரைவில் ஒரு மருத்துவமனை கட்டி இந்தியாவில் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் வந்து இலவசமாக மருத்துவம் பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் மருத்துவமனை அமைக்க இருப்பதாக ஷியாமளா தேவி கூறுகிறார். இதற்கு பிரபாஸ் ஆதரவு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது கிருஷ்ணம்ராஜுவின் ஆசை என்றும் அவர் கூறினார். பான் இந்திய ஸ்டார் பிரபாஸ் சேவை காரியங்களில் எப்போதும் முன்னணியில் இருப்பார். ஆறடிக்கு மேல் உயரம் உள்ள அவர் உதவி செய்வதிலும் தன்னுடைய பெரிய மனதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல் ஷூட்டிங் சமயத்தில் தன்னுடைய கேரவன், ஊழியர்கள் செலவுகளை பிரபாஸே ஏற்றுக்கொள்வாராம். கடந்த ஆண்டு ஆந்திராவில் விஜயவாடா, ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது பிரபாஸ் தாராளமாக ரூ.2 கோடியை ஒவ்வொரு கோடி வீதம் இரண்டு தெலுங்கு மாநிலங்களுக்கும் கொடுத்த விஷயம் தெரிந்ததே. ஆனால் பிரபாஸ் செய்யும் சேவை காரியங்களுக்கு எப்போதும் கவனம் ஈர்க்க மாட்டார்.. விளம்பரம் என்றால் சுத்தமாக பிடிக்காது. எந்த உதவியாக இருந்தாலும் ரகசியமாக செய்து தன்னுடைய பெருந்தன்மையை காட்டுகிறார்.