ஜெயக்குமார் மரண வழக்கில் இன்று ஆஜராகிறார் தங்கபாலு

 
tn

நெல்லையில் ஜெயக்குமார் மரண வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலுவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் காவல்துறை முன்பு இன்று ஆஜராகிறார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ம் தேதி தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  இதற்கு முன்பாக இவரது மகன் தனது தந்தையை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் . அத்துடன் எனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர் . அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று நான்கு பக்கங்கள் கொண்ட புகார் ஒன்றை ஜெயக்குமார் நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. 

tn

ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . அத்துடன் ஜெயக்குமார் மரணம் தற்கொலை அல்ல என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தில் குரல்வளை முற்றிலுமாக எரிந்துள்ளது ஏற்கனவே இறந்த உடலை எரித்தால் மட்டுமே குரல்வளை முற்றிலுமாக எரியும் என்று  உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடற்கூறாய்வு அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர். அத்துடன் உடற்கூறாய்வு அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

tn
இந்நிலையில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் தங்கபாலு இன்று ஆஜராகிறார் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளனர். 

15க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். மரணத்துக்கு முன் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் தொடர்புடையவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி தங்கபாலுவுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார்.