அதிர்ச்சி ரிப்போர்ட்! திருப்பூரில் ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றிய பயங்கரவாதிகள்

 
ச்

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டில் கைதான 8 பேரில் 6 பேர், தமிழ்நாட்டின் திருப்பூரில் ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி செங்கோட்டையில் நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் எட்டு பேரை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுபவர்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து மிசானூர் ரஹ்மான், முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஷாஹித் மற்றும் முகமது உஜ்ஜால் என அடையாளம் காணப்பட்டுள்ள ஆறு பேரும், மேற்கு வங்கத்தில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். மற்ற இருவர் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது.