சோதனையின் போது அதிகாரிகளை அமலாக்கத்துறை தூங்க விடாதது மனித உரிமை மீறல் - டாஸ்மாக் தரப்பு

 
tasmac

டாஸ்மாக்கில் நடந்த ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை ஏப்.15 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Highcourt


டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை, மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்கள் போக்குவரத்து உரிமங்கள் வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, அமலாக்க துறையின் சோதனையையும், பறிமுதலையும் சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும் தமிழக அரசு தரப்பிலும், டாஸ்மாக் நிர்வாகம் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன

இந்த வழக்கு  2வது நாளாக விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் தரப்பு, “சோதனையின் போது, வழக்கறிஞரை சந்திக்க கூட அமலாக்கத்துறை அனுமதிக்கவில்லை. சோதனையின் போது பெண் அதிகாரிகளை விசாரிக்க, ED பெண் அதிகாரிகளை அழைத்து வரவில்லை. அமலாக்கத்துறையினர் சட்டத்தை மதிக்காமல் தங்களது விருப்பத்திற்கு ஏற்றபடி செயல்பட முடியாது. சோதனையின் போது, சில அதிகாரிகளை அமலாக்கத்துறை தூங்க விடாதது மனித உரிமை மீறல். சோதனையின் போது ரகசியம் எனக் கூறி எந்த விவரங்களையும் தர்அ மறுத்த அமலாக்கத்துறையினர், சோதனை முடிந்த பின்னர் அறிக்கை வெளியிட்டதன் நோக்கம் என்ன? சோதனையை அமலாக்கத்துறை விசாரணை போல மேற்கொண்டது” என வாதம் செய்தது. டாஸ்மாக் தரப்பு வாதங்கள் முடிவடையாததால் விசாரணை ஏப்.15 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.