சிறுமி டான்யா டிஸ்சார்ஜ் ; படிப்பு செலவை அரசு ஏற்கும் - அமைச்சர் ஆவடி நாசர் தகவல்!!

 
tn

 முகச்சீரமைப்பு சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டானியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

tanya

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீரபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் - சௌபாக்யா தம்பதி . இவர்களின் மூத்த மகளான ஒன்பது வயது சிறுமி டான்யா அரிய வகை முக சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட சிறுமி தனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினை கேட்டுக்கொண்டார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி  ஜான் வர்கீஸ் சிறுமி வீட்டிற்கு நேரடியாக சென்று பல்வேறு அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

tanya

 அத்துடன் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த 23ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 9 மணி நேரமாக உயர் தொழில்நுட்ப அதி நவீன முக அறுவை சிகிச்சையானது,  31 மருத்துவ குழுவினர் அடங்கிய மருத்துவர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து  சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உடல்நிலை தேறினார். அவருக்கு வாய் வழியாக திரவ உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.

tn
இந்நிலையில் முகச்சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆவடி சிறுமி டானியா இன்று டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமி டானியா இன்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில் அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பூங்கொத்து அளித்து சிறுமியை வாழ்த்தினர். இதை எடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் , முக சிதைவுக்கு சிகிச்சைளிக்கப்பட்ட சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசை ஏற்கும்.  சிறுமி குடும்பத்திற்கு இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.