இந்த 14 மாவட்டங்களில்....மாலை 4 மணி வரை மழை வெளுக்க போகுது!

 
rain rain

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 
கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக 22-ஆம் தேதி வாக்கில் அதே அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும். 

இந்த நிலையில், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியா குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், விருதுநகர், சென்னை, செங்கல்பட்டு, தி.மலை, வேலூர், திருவள்ளூர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.