விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து - 2 பேர் கைது

 
pattasu

விருதுநகர் அருகே பொம்மையாபுரம் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போர்மேன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஆப்பைய நாயக்கன்பட்டி பகுதியில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாகின.  தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.  பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் இருந்த அறையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த அவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர், மேனேஜர் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், விருதுநகர் அருகே பொம்மையாபுரம் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போர்மேன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்தில் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சதீஷ்குமார், நிரஞ்சனா தேவி, கணேசன் ஆகிய 3 பேர் மீது வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.