மதியம் 1 மணி வரை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Dec 18, 2024, 10:29 IST1734497986884
![rain](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/1698c68ae3b29db3b3087dfb12fcab4f.jpg)
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.