தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது
Mar 25, 2025, 08:39 IST1742872143148

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளனகடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழகத்தில் சுங்க சாவடி கட்டனம் உயர்த்தப்படவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் நிலையில், எஞ்சி உள்ள 38 சுங்கச்சாவடிகளில் 2ம் கட்டமாக செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.