கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலை கடைகள் திறப்பு!
திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலை கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்திராவிட மாடல் ஆட்சியில் 40 மாதங்களில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் பல்வேறு புதிய திட்டங்கள். மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி மாபெரும் சாதனைகள். 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு. 100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள், ரூ.359 கோடியில் மேல் கூரையுடன் நெல் சேமிப்புத் தளங்கள், இந்தியாவிலேயே அதிகமான நெல் சேமிப்புக் கிடங்குகள் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு. வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் ஒன்றிய அரசு பாராட்டு.
தமிழ்நாட்டில் நெல், அரிசி உட்பட அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு நிலவரங்களை எப்போதும் சீராக நிர்வகித்திட உதவும் வகையில் வெளிச் சந்தை வர்த்தகம் உட்பட அனைத்து வர்த்தக நடவடிக்கைளையும் மேற்கொள்வதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1956ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின்படி 23.2.1972 அன்று நிறுவப்பட்டது. தமிழ்நாட்டு மக்களுக்குக் குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கியது உட்படப் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களால் தமிழ்நாட்டிலிருந்து வறுமை முற்றிலும் அகற்றப்பட்டு மக்கள் பசிப்பிணி ஒழிந்து வளமான வாழ்வில் மகிழ்ச்சி கொண்டுள்ளனர். ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகள் வாயிலாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது. கடந்த 40 மாதங்களில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.