இனி தமிழில் மட்டுமே அரசாணை - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

 
assembly

தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் இனிமேல் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த காரணத்தினாலயே இந்தி மொழி மற்றும் மும்மொழி கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் இனிமேல் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

அந்த அறிவிப்பில், தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப்பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்
 என தெரிவிக்கப்பட்டுள்ளது.