வேங்கைவயல் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் - தமிழக அரசு!

 
assembly

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வேங்கைவயல் சம்பவத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. வேங்கைவயல் சம்பவத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோரின் செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

செல்ஃபோன்களில் இருந்து அழிக்கப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள் மீட்கப்பட்டு இச்சம்பவத்தில் அவர்களது தொடர்பு உறுதி செய்யப்பட்டது.
Ins புகைப்படங்கள், செல்ஃபோன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல், மருத்துவ அறிக்கைகள் கொண்டே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.