சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட தனது உரையின் வீடியோவை வெளியிட்ட ஆளுநர்!
![rn ravi](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/0875a07d189a5b29c77114283c47ccbd.jpeg)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட தனது உரையின் வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டதாக கூறி அவர் உரையை படிக்காமல் அமர்ந்தார். இதை தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்து முடித்தார். இருப்பினும் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு ஆளுநர் இன்று ஆற்றிய உரை.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) February 12, 2024
Hon'ble Governor's address in the Tamil Nadu Legislative Assembly today. @rashtrapatibhvn @PMOIndia @HMOIndia @MIB_India @PIB_India @pibchennai @DDNewslive @DDTamilNews @airnewsalerts @airnews_Chennai @PBNS_India… pic.twitter.com/PBWoo63B2y
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட தனது உரையின் வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் ஓரிரு நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை சப்-டைட்டில் உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.