எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது!

 
Fisherman

இலங்கை தெற்கு மன்னார் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடி அனுமதி சீட்டுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இலங்கை தெற்கு மன்னார் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை இவர்களை சுற்றி வளைத்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்துச் சென்றது. கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
 விசாரணை முடிந்தபின் மன்னார் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில், இதனால் மீனவர்கள் கவலையில் உள்ளனர். இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.