இடி, மின்னலின் போது இதை செய்யாதீர்கள்....மின்சார வாரியம் எச்சரிக்கை

 
பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு!

இடி மின்னலின் போது, மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக மின்சார வாரியம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் தமிழக மின்சார வாரியம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். மின் நுகர்வோர்கள் மழை காலங்களில் மின்சாரத்து பாதுகாப்பாக கையாளுவது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

eb

இந்த நிலையில், இடி மின்னலின் போது, மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய, பின்வரும் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதாவது, மரங்கள், மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம். இடி மின்னலின் போது மின்னணு பொருட்கள் சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். வெளிப்புறத்தில் இருந்தால், உங்கள் வீட்டிற்குள் அல்லது பாதுகாப்பான கட்டிடத்திற்குள் செல்லவும். உங்கள் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்துக் கொள்ளவும் இடி மின்னலின் போது, மின்சார அபாயங்களைத் தவிர்க்க இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.