வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
stalin

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை என மும்பையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.  ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் முதல் 2 ஆலோசனை கூட்டங்கள் முறையே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது.  இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு , தொகுதி பங்கீடு, கூட்டணிக்கான இலச்சினை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 2வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

INDIA

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பேசியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள். ஒரே கூட்டத்தில் பிரிந்து விடுவார்கள் என பா.ஜ.க. நினைத்தது. ஆனால், கூட்டணியாக இணைந்து அதற்குப் பெயரும் சூட்டி மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி விட்டோம் என்பது நம்முடைய உறுதியைக் காட்டுகிறது. இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் அடிப்படையில் தேவைகளை இந்தியா கூட்டணி சந்தித்து வருகிறது. இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவதே ஒற்றை இலக்கு. இவ்வாறு கூறினார்.