பொங்கல் பண்டிகை...மகளிர் உரிமை தொகையை இன்றே வரவு வைக்க முதலமைச்சர் உத்தரவு!
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இன்றே வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தகுதி வாய்ந்த 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது.
எதிர்வரும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயினை முன்கூட்டியே வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.1.2025) உத்தரவிட்டுள்ளார்கள். இந்த உத்தரவின் மூலம் பயன்பெறும் 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணிகள் இன்று காலை முதலே தொடங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இன்று அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1000/- வரவுவைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.