தி.மு.க.வின் 2-வது ஊழல் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும்- அண்ணாமலை அதிரடி

 
Annamalai

தி.மு.க.வின் 2-வது ஊழல் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டி.ஆர் பாலு என்மீது வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது. என் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன். வழக்குகளுக்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்த மாட்டேன் என கூறினார். தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டது குறித்து பேசிய அண்ணாமலை, சிறப்பாக பணியாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? என கேள்வி எழுப்பினார். ஆடியோ காரணமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்பட்டது தவறு. ஆடியோவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது உண்மை தான்.  பிடிஆர் ஆடியோவை வெளியிட்டது தொடர்பாக என் மீது வழக்கு தொடருங்கள்.வழக்கு தொடர்ந்தால், ஆடியோவின் உண்மை தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் என்றார்.

இந்த வழக்குகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. தி.மு.க.வின் ஊழல் 2-வது பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் 11 பேர் பெயர் இடம்பெற்று இருந்தது. இனி வெளியிடப்படும் பட்டியலில் புதிய அமைச்சர்கள் உள்பட 21 பேர் பெயர் இடம்பெறும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.