அரசியல்வாதியாக நல்ல தைரியத்துடன் வந்துள்ளார் தம்பி விஜய் - தமிழிசை பேட்டி

 
tamilisai

நடிகர் விஜய் அரசியல்வாதியாக நல்ல தைரியத்துடன் வந்துள்ளார் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

நடிகர் விஜய்  தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் ,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

vijay

இந்த நிலையில், நடிகர் விஜய் அரசியல்வாதியாக நல்ல தைரியத்துடன் வந்துள்ளார் என காரைக்காலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிவதை வரவேற்கிறேன். அவருக்கு எந்த அறிவுரையும் கூற வேண்டியது இல்லை. தம்பி அரசியல்வாதியாக நல்ல தைரியத்துடன் வந்துள்ளார். அவர் நன்றாக மேலே வரட்டும், எல்லாரும் மேலே வந்தால் மக்களுக்கு நல்லது தான். ஆரோக்கியமான போட்டி இருக்கட்டும் என கூறினார்.