"தமிழகத்தின் பலம் குறையும்; உ.பி-யின் பலம் ஓங்கும்!" - தொகுதி மறுவரையறை குறித்து ப.சிதம்பரம் பகீர் எச்சரிக்கை..!

 
chidambaram

 முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில்,

அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது. லோக்சபாவில் தமிழகத்தின் எண்ணிக்கை தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை என்று நான் சொன்னேன். தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது 46 ஆக குறையும்.

அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் 140 ஆக மேலும் உயரும்.மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3%. இது குறைந்து 20.7% ஆகும். லோக்சபாவில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும். அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.