அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்!
Jul 15, 2020, 14:30 IST1594803618000
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனையில் கே.பி.அன்பழகன் பங்கேற்றிருந்தார்.
இவருடன் ஜெயக்குமார், காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றிருந்தனர். இதையடுத்து அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தற்போது சென்னை தனியார் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
முன்னதாக அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் கொரோனா சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.