வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணியி தமிழ்நாடு அரசு உதவ தயார் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

 
stalin

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக  சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரு பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன.  இந்த நிலச்சரிவுகளால் சூரல்மலை உள்பட 3 இடங்களில் சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.  இதுவரை 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை 40 பேர் உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  பலர் மண்ணில் புதைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.   

  வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணியி தமிழ்நாடு அரசு உதவ தயார் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.. 

ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாலும், முக்கிய  பாலம் அடித்துச் செல்லப்பட்டதாலும்,  தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெரும் சவாலாகியுள்ளது. மாநிலம் முழுவதிலும் இருந்த பேரிடர் மீட்புக் குழுவினர் வயநாட்டிற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் களமிறங்கியுள்ளனர். 

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வய்நாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொலள்கிறேன். இச்சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.