நாளை பள்ளிகள் இயங்கும் -தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

 
Q Q

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கு முந்தைய நாட்களான அக்டோபர் 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இந்நிலையில் பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் அக்டோபர் 25 சனிக்கிழமை பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அனைத்து அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சி பள்ளிகள் அக்டோபர் 25ம் தேதி சனிக்கிழமை முழு நேரம் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்திருந்தது. இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் நாளை பள்ளிகள் முழுநேரம் செயல்படும் மற்றுத் செவ்வாய்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.

அதேபோல் புதுச்சேரியில் உள்ள அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் நாளை 25ம் தேதி அனைத்து பள்ளிகளும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வழக்கம் போல் வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.