தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் நிறைவு நாள்: இன்றும் கேள்வி நேரம் ரத்து..!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் முடிந்துவிட்ட சூழலில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. வருவாய்துறை, நெடுஞ்சாலைகள், நீர்வளம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.
கூட்டத்தொடரின் இன்றைய நாளில், காவல்துறை, மீட்புப் பணிகள், உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வர் விஜய் பதிலுரை ஆற்றினார். இன்றைய நாளில், முன்னதாகவே கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இந் நிலையில், நடப்பு கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் (செப்.8) கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் 8 மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. அவையை பிற்பகல் 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும். உறுப்பினர்கள் சுருக்கமாக பேச வேண்டும் என்று அவர் அறிவித்து உள்ளார். இன்று (செப்.8) அலுவலின் போது, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த கூட்டத்தொடரின் கடைசி நாள் செப்.8ம் தேதியாகும்.
இன்றைய அலுவல்கள் முடிந்த பின்னர், அவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படும்.

