போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை பிப்-7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

 
அரசு போக்குவரத்து கழகம்

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதமாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை வழங்க  வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும், 20,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்  நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.போக்குவரத்துத்துறை இழப்பை ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச  கோரிக்கை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கடந்த 10 நாட்களுக்கு முன் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் பண்டிகை நேரம் என்பதால் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜன.19ம் தேதி வரை தற்காலிக வாபஸ் பெறப்பட்டது.

மகளிருக்கு இலவச பேருந்து

இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல்படி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது, அப்படி இருந்தாலும் அது கைவிடப்படும் என இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்த தொழிற்சங்கத்தினர், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும் என தெரிவித்தனர்.