"மரத்துபோவதற்கு முதுகுல மருந்து போட்டு.. சாட்டை அடி.." - எஸ்.வி.சேகர்
அண்ணாமலை போன்ற கோமாளியை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்த டெல்லி தலைவர்கள் தங்களைத் தானே சாட்டையில் அடித்துக் கொண்டாலும் பாஜகவை காப்பாற்ற முடியாது என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பே போடமாட்டேன்னு சொல்றது கோமாளித்தனத்தின் உச்சக்கட்டம். இனிமேல் அண்ணாமலை வாழ்க்கையில் செருப்பே போட முடியாது. அரசியல் தெரியாத கோமாளி அண்ணாமலை. சட்டம், ஒழுங்கு சரியில்லை என்றால் எதுக்காக சவுக்கால் அடித்துக்கொள்கிறார். இதற்கு பெயர் பைத்தியக்காரத்தனம், கோமாளித்தனம். இவரை தலைவராக தேர்ந்தெடுத்தவர்கள்தான் தங்களை சவுக்கால் அடித்துகொள்ள வேண்டும். சவுக்கால் அடித்துக் கொள்வது ஒரு தகுதியா? அப்படி பார்த்தால், தமிழக பாஜகவின் சிறந்த தலைவராக ஒரு படத்தில் ஆடிக்கொண்டு சவுக்கால் தன்னை அடித்துக்கொண்ட எம்.எஸ் பாஸ்கரை தான் தலைவராக நியமிக்க வேண்டும். அண்ணாமலை போன்ற கோமாளியை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்த டெல்லி தலைவர்கள் தங்களைத் தானே சாட்டையில் அடித்துக் கொண்டாலும் பாஜகவை காப்பாற்ற முடியாது.
பாஜகவில் நடக்கக்கூடிய ஒழுக்கக்கேடுக்கு அண்ணாமலை தினமும் சவுக்கால் அடித்துக்கொள்ள வேண்டும். அண்ணாமலை போன்ற கேவலமான, கோமாளித்தனமான தலைவரை தமிழக அரசியல் இதுவரை பார்த்ததில்லை. சவுக்கால் அடித்து அண்ணாமலை விரட்டியடிக்கப்படுவார். இரவே மருத்துவரிடம் கேட்டு, மரத்துபோவதற்கு ointment வாங்கி முதுகில் போட்டுக்கொண்டால் யாருக்கு தெரியபோகிறாது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.