"சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல" - திருமாவளவன்

 
tt

கொலை செய்யப்பட்ட  பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்து  தொல் . திருமாவளவன் கண் கலங்கி அழுதார். 

t

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். 




அப்போது பேசிய அவர் , ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை; உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். 8 பேர் சரணடைந்துவிட்டதால் புலன் விசாரணையை காவல்துறை முடித்து விடக் கூடாது; கூலிப் படைக் கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்; ஆம்ஸ்ட்ராங் போன்றோருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தலித்துகள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கிறது. கூலிப்படை கும்பலை, சாதியவாத கும்பலை தடுக்கத் தவறினால் தமிழ்நாடு அரசுக்கு மேலும் களங்கம் ஏற்படும் என்றார்.