இந்தியாவில் பாலியல் தொழிலை ஒரு தொழிலாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இந்தியாவில் பாலியல் தொழிலை ஒரு தொழிலாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Prostitution தொழில் செய்பவர்களை காப்பாற்றி ஒர் இடத்தில் பாதுகாத்து வைப்பது எல்லா நேரங்களிலும் சரியானது அல்ல. Prostitution என்பது சட்டப்படி ஏற்கப்பட்ட தொழில் அல்ல. ஆனால், தன் விருப்பமாக (பாலுறவின் தேவை அதிகமுள்ள நபர்), அதிக நபர்களுடன் பாலுறவில் ஈடுபட்டால், அது தண்டனைக்குரிய குற்றம் அல்ல, தன்விழைவுடன் ஈடுபடுவர், கடத்தி வரப்பட்டு தொழில் செய்பவராகத்தான் இருக்கவேண்டும் எனும் கட்டாயமும் இல்லை. அவர் ஆணாகவோ, பெண்ணாகவோ எவராகவும் இருக்கலாம். சட்டப்படி குற்றமாக இல்லாதவரை,(உதாரணமாக, வல்லுறவு, கடத்தல், குழந்தைகளை...) தண்டனைக்குரிய குற்றமல்ல எனும் பொருளில் சமீப தீர்ப்பு வந்திருக்கிறது. விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெரியவர்கள் மீது காவல்துறை எவ்வித குற்றவியல் நடவடிக்கை எடுக்கவோ, அவர்களை துன்புறுத்தவோ கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முக்கியமாக இங்கே நீதிமன்றம் அழுந்தச் சொல்வது,
1. இதுபோன்ற வழக்குகளில், அனைவருமே கடத்தப்பட்டு, வலிந்து செய்ய வைக்கப்பட்டவர்கள இல்லை. தன் விழைவாக செய்பவர்களும் உண்டு.
2. வன்முறை இருக்கும், and illegal activities மட்டுமே தண்டனைக்குரியவை.

