இன்று கரையைக் கடக்கிறது அதிதீவிர புயலான ‘மோக்கா’..

 
cyclone

வங்கதேசம் - மியான்மர் இடையே  இன்று அதிதீவிர ‘மோக்கா’புயல் கரையை கடக்கிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோக்கா” புயல் நேற்று முன்தினம்   காலை மிகத்தீவிர புயலாக மாறியது. இந்நிலையில் மோக்கா புயல் நேற்றி  காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலானது  மியான்மர் மற்றும் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.  மோக்கா புயலால் தமிழகத்திற்கு  எந்த விளைவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருந்தபோதிலும்,  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 16 வரை  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Rain

இந்நிலையில் அதிதீவிர புயலாக நிலவிவரும் ‘மோக்கா’ இன்று தென்கிழக்கு வங்கதேசம் - வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 180 முதல் 190 கி9.மீ வேகத்திலும் , இடையிடையே 210 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்குமெனவும் கணித்துள்ளது.