சூப்பர் திட்டம் : இனி 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் சிலிண்டர்..!

 
1

பொதுவாக நம்முடைய வீடுகளில் பயன்படுத்தும் இரும்பு கேஸ் சிலிண்டர்கள் மிகவும் கனமாக இருக்கும். அத்துடன் அதில் எவ்வளவு கேஸ் பாக்கி இருக்கிறது, இன்னும் எத்தனை நாளைக்கு வரும்? என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியாது.

இதுபோன்ற கஷ்டங்களையெல்லாம் தவிர்க்கும் பொருட்டு, சமையல் சிலிண்டர் பயன்பாட்டில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் வகையில் எடை குறைவாகவும், சிலிண்டரின் உட்புறம் தெரியும் வகையிலும் டிசைன் செய்யப்பட்டுள்ள புதிய ரக உருளைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் "எச்பி நாவ்யா" என்ற பெயரில் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடைகளில் இந்த சிலிண்டர்களை கொண்டு வந்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், மீனம்பாக்கம், வேளச்சேரி. ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் இவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த சிலிண்டர்கள் துருப்பிடிக்காது.. இவற்றை எளிதாக கையாளலாம்...

அதுபோலவே இந்தியன் ஆயில் நிறுவனம் "இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்" என்ற பெயரில் 10 கிலோ சிலிண்டரையும், 4 மணி நேர அதிவேக டெலிவரி சேவையையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையின் மூலம் நீங்கள் புக் செய்த 4 மணி நேரத்தில் சிலிண்டர் வீட்டிற்கு வந்துவிடும். அல்லது உங்களுக்கு எந்த நேரம் வசதியோ அந்த நேரத்தை சொல்லி வாங்கிக் கொள்ளலாம்.

இதே 4 மணி நேர டெலிவரி வசதி, சிறிய அளவிலான 5 கிலோ "இண்டேன் சோட்டு" சிலிண்டருக்கும் வழங்கப்படுகிறது. குறைவான ஆவணங்களுடன் இந்த சேவையை பெறலாம் என்பதால், வாடகை வீட்டில் தங்குபவர்கள், தனியாக தங்கி வேலை செய்பவர்கள் மற்றும் சிறிய குடும்பங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த சேவையைப் பெற எப்படி புக் செய்வது?

'இந்தியாஆயில் ஒன்' ஆப், இந்தியாஆயில் கஸ்டமர் போர்டல் அல்லது 7588888824 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் எளிதாக ரீஃபில் புக் செய்யலாம்.