கோவில்பட்டி சிறுவன் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்- கூடவே இருந்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்
கோவில்பட்டியில் சிறுவன் கொலை வழக்கில் கூடவே இருந்து நாடகமாடிய ஆட்டோ ஓட்டுனர் சிறுவனை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் கருப்பசாமி 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி காலையில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட சகோதரன் பள்ளிக்கு சென்று விட கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலைக்கு சென்று திரும்பி வந்த கருப்பசாமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது கருப்பசாமி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவன் கருப்பசாமி கழுத்தில் ஒன்றை பவுன் தங்க செயின் மற்றும் கையில 1கிராம் தங்க மோதிரம் அணிந்து இருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை என்றதும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்து சிறுவனை அங்குள்ள வீடுகளில் சோதனையும் நடத்தினர் மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர்.
இந்நிலையில் மறுநாள் காலையில் சிறுவன் வீடு அருகே இருந்த பக்கத்து வீட்டு மாடியில் கருப்பசாமி மூச்சுப் பேச்சில்லாமல் மயக்கம் அடைந்த நிலையில் சிறுவன் கிடந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் இறந்து விட்டதாகவும் இறந்து பல மணி நேரம் இருக்கலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் சிறுவன் விவாகரத்தில் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை பல்வேறு கோணங்களில் தேடி வந்தனர்.
சிறுவர் மரணம் நகைக்காக நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். கருப்பசாமி வீட்டு அருகே அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்களிடம் விசாரணை நடத்தினர்.இதுக்கு பல்வேறு பல்வேறு கோணங்களை விசாரணை நடத்தியதில் எந்தவித விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தொடர்ந்து விசாரணை செய்து வந்த நிலையில் இந்நிலையில் கருப்பசாமி வீட்டின் எதிரே வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி சிறுவனை ஓரினச்சேர்க்கை காக கொலை செய்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமியை கைது செய்தனர். ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி சிறுவன் கருப்பசாமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது கூடவே சென்றுள்ளார் எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளார் அதனை தொடர்ந்து போலீசார் பல்வேறு நபரிடம் விசாரிக்கும் போது அருகிலேயே நின்று கொண்டு இருந்துள்ளார். பின்னர் போலீசார் விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி கொண்டு வந்து விசாரிக்கையில் தான் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.