‘அப்பா’வை வாழ்த்த வந்த மாணவர்கள்! காரணம் இதுதானா?

 
‘அப்பா’வை வாழ்த்த வந்த மாணவர்கள்! காரணம் இதுதானா?

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தரான முதலமைச்சருக்கு மாணவ மாணவியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பச்சையப்பன் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, சென்னை கிறித்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி, மாநில கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளை நூற்றுக்கணக்கான மாணவ மாசவியர்கள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதற்கு முன்பாக அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் திரு உருவ சிலைக்கு கீழே  மாணவர்களுடன் முதலமைச்சர் குழு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார்.

உச்சநீதிமன்றம் சென்று போராடி இந்த வெற்றியை பெற்றுள்ள முதலமைச்சருக்கு மாணவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழகத்திற்கு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக முதலமைச்சர் செயல்படுவதாகவும் மாணவர்கள் புகழாரம் சூட்டினர். நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் வாழ்த்து தெரிவிக்க வந்த நிலையில் சிலரை மட்டுமே முதலமைச்சர் சந்திப்பார் என நினைத்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக, அனைவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்றதோடு நன்றாக படிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் முதலமைச்சர் வழங்கினார்.