பள்ளியில் உயிரிழந்த மாணவன் : பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்..

 
பள்ளியில் உயிரிழந்த மாணவன் : பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்..

முசிறியில் சக மாணவர்கள் தாக்கி உயிரிழந்த மவுலீஸ்வரன் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலசமுத்திரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்த தோளூர்பட்டியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்ற மாணவர், பள்ளியில் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். விளையாட்டால் மாணவர்களிடையே எதிர்பாரத விதமாக நடந்த சம்பவத்தில் அவர்  உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளி மாணவர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்ததாகவும், மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

dead body

மேலும்,  மாவட்டக் காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம்,  இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.  முன்னதாக இந்த சம்பவத்தின் போது  பணியில் கவனக் குறைவாக  தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும்காலங்களில் பள்ளிகளில்  இதுபோன்ற சம்பவங்கள்  நிகழாத வண்ணம், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறும், துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தினார்.  இந்த நிலையில், மாணவர் மவுலீஸ்வரன்  வீட்டிற்கு நேரில் சென்ற அவரது  பெற்றோருக்கு ஆறுதல் கூறி  அமைச்சர் அன்பில் மகேஷ் , ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.