"இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!" - சி.வி.சண்முகத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் விடுத்த அதிரடி எச்சரிக்கை!
அதிமுக சார்பாக நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிவி சண்முகம் பேசியது சர்ச்சைகளை கிளப்பியது.
அதாவது, முதலமைச்சரின் 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்ற திட்டத்தை விமர்சிக்கும் விதமாக 'கனவை சொன்னால் இவர் நிறைவேத்துறாராம். எனக்கு நயன்தாரா வேணும். கனவை நிறைவேத்துவாரா என கொச்சையாக பேசியிருந்தார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் ஒரு பெண் குறித்து சிபி சண்முகம் எவ்வாறு இப்படி பேசலாம் என சர்ச்சைகளை எழுந்தது.
இதனையடுத்து பலரும் அவருடைய பேச்சுக்கு கண்டனங்கள் தெரிவித்த நிலையில், வருத்தம் தெரிவித்தார் சிவி சண்முகம். இந்த விவகாரம் சம்பந்தமாக தற்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என சொல்லி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. நான் ஒரு பெண். எனவே நிச்சயமாக யாராக இருந்தாலும், எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் ஒரு பெண்ணை தரக்குறைவாக பேசினால் கண்டிக்க உரியவர்கள்.
அதனால் அந்த வார்த்தைகளை, அவர்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள். இப்போ அவுங்க கிட்ட அந்த கேள்வியை கேட்டால் ஒப்புகொள்வார்களா. பெண்களை இழிவுப்படுத்தி பேசுவதை யாராக இருந்தாலும் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அது நடிகையாக இருந்தாலும் சரி, எந்த பெண்ணாக இருந்தாலும் சரி. பெண்களை இழிவுப்படுத்துவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த பெண் சக்திகளை ஒன்றாக திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம், கண்டனத்தை நான் முன்னெடுப்பேன்.இதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் கிடையாது. பெண்களை மதிக்கும் ஒரு நாட்டில் இதுபோன்று இழிவுப்படுத்தி பேசி, கைத்தட்டி சிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. யாராக இருந்தாலும் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். என்னுடைய பிறந்தநாள் செய்தியாக இதை கூறுகிறேன் என தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

