இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

 
stalin

இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக் கல்லறைக்கா இந்த நிலை!

இந்தியாவின் புனேவில் இறந்த ஆங்கிலேயர் பென்னிகுயிக். படித்து, வளர்ந்து ஆங்கில அரசின் அதிகாரியாக உயர்ந்தார். அப்போது இந்தியாவை ஆங்கில அரசு ஆண்டுகொண்டிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையின் நீரைச் சேமிக்கும் விதத்தில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டார் பென்னிகுயிக். இதற்காக கடும்முயற்சி எடுத்து ஆங்கில அரசின் அனுமதி பெற்றார். அணை கட்டும் காலத்தில் கடும் மழைபெய்ய பெரும் சேதமானது கட்டடப்பணி.  பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தையும் செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்த கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் நினைவு இல்லம் தமிழக அரசால் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக் கல்லறைக்கா இந்த நிலை!

இந்நிலையில்  முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கிற்கு  இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பென்னிகுயிக்பிறந்தநாளையொட்டி  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சொந்த ஊரான கேம்பர்ளியில்  சிலை நிறுவப்படும். லண்டன் வாழ் தமிழர்கள் கேம்பர்ளி நகர் பூங்காவில் சிலையை நிறுவ சட்டப்படி ஒப்புதல் பெற்றுள்ளனர்.  

stalin

முல்லைபெரியாறு அணையால் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத் தேவைகள் பூர்த்தி ஆகின்றன. தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்தார். 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் செழுமை அடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.