ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்!

 
Rameswaram

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் அவ்வபோது தாகுதலுக்கு ஆளாகின்றனர். நேற்று வேதாரண்யம் மீனவர்களை தாக்கி அவர்களது மீன்கள் மற்றும் உடமைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். 

fishermen

இந்த நிலையில், கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் 2 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 23 பேரையும் கைது செய்ததோடு, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.