தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

 
fishermen

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

fishermen

தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் அவ்வபோது தாகுதலுக்கு ஆளாகின்றனர். 

இந்த நிலையில், இலங்கை மன்னார் தாள்வுபாடு கடற்பரப்பு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மீனவர்கள் 18 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது.