தமிழ் புத்தாண்டுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப்ரல் 9 ஆம் தேதியும் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரம் 10 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கு ஏப்ரல் 15 ஆம் தேதியும் கொல்லத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தரபுரம் வடக்கிற்கு ஏப்ரல் 10 ஆம் தேதியும் திருவனந்தரபுரம் வடக்கில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 15 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு ஏப்ரல் 13 ஆம் தேதியும் தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 14 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படவிருக்கிறது.



